இடுகைகள்

இலட்சுமணனின் நுட்பமான பார்வை : எழுத்தாளர் சுஜாதா அணிந்துரை

படம்
இ லட்சுமணனின் கவிதைகளைப் படித்த போது எனக்கு ஏற்பட்ட முதல் உணர்ச்சி .."அடடா..இறந்து விட்டாரா?" இத்தனை நுட்பமாக தன்னைச் சுற்றிலும் உள்ள வாழ்க்கையையும், மனிதர்களையும், மரங்களையும் கவனித்தவர் தொடர்ந்து உயிர் வாழ்ந்திருந்தால் என்னவெல்லாம் சாதித்திருப்பார் என்ற ஏக்கம் நிச்சயம் ஏற்பட்டது. ஆனால், வாழ்ந்திருந்தால், அவர் இன்றைய தினங்களின் அவலங்களை  நோக்கி (குறிப்பாக வக்கீல் வேலையிலிருந்து) கவிதை எழுதுவதையே நிறுத்தியிருப்ப்பார் எனத் தோன்றுகிறது. களத்து மேட்டில் கூட்டாஞ்சோறு தின்று, பக்கத்துக்கு வீட்டு பாத்திமாவுடன் அப்பா, அம்மா விளையாடி, பச்சோந்தியின் வாயில் மூக்குப் பொடி தூவி, தட்டான் பிடித்து, வண்ணத்து பூச்சிகளை தொடர்ந்த தன் இளமைக் காலத்துடன் 'பொம்மைகளோடும், கேபிள் டிவி, வீடியோ கேமுடனும் சபிக்கப்பட்டிருக்கும் தம் பிள்ளைகளின் பால்யத்தை ஒப்பு நோக்கி அவரது கவிதை நெஞ்சு நின்று போயிருக்கும் இலட்சுமணனின் பார்வையின் நுட்பம் பல கவிதைகளில் தெரிகிறது மேல்மூச்சு வாங்குகிற புயல், தார்குச்சிகளை அலட்சியம் செய்து மண்டியிடும் மாடு, காரணம் எதுவுமின்றி அலையும் தெரு நாய், மௌனத்தாலும், கவிழ்கிற பார்வ...

இசை

படம்
இ ருக்கலாம் பலருக்கு  இசையென்பது  பிணத் தோல்களின் இரைச்சலாய் .. ஆனால்  எனக்கோ  குருவிகளின்  சிறிய தொண்டைகளிலிருந்து .. இரா. இலட்சுமணன்

பெயர்

படம்
  என்னவாய் இருக்கும் தெருவில் அலைந்து திரிகிற அந்தப் பைத்தியத்தின் பெயர் ? இரா. இலட்சுமணன்

தொடரும் நிழல்

அண்ணனைப்போல் இரு  அல்லது  இருக்காதே  ஓப்பீடாய்ப் போதனைகள்  அயல்நாட்டு ஒற்றன் போல்  பள்ளி நாட்களில்  தொடரும் நிழல்  அதட்டப்படவும்  குட்டுப்படவும்  சாயம் மங்கி  பற்றாமல் போன சட்டைகளைப்  புத்தம் புதிய காப்பியாய்  அணிந்து கொள்ளவும்  தம்பி என ஓருருவம் ! எப்போது வாய்க்கும்  எனக்கென ஒரு பிம்பம்?  வெறுப்புதான்  ஆயினும்  இன்று  அண்ணா வரப்போகிறான்  என்றதும்  மகிழ்ச்சியாய்த் தான் இருக்கிறது  இரா. இலட்சுமணன்

அப்பா

புகைவண்டியின்  டடக் டடக் சக்    சடக் சட்டக்  சத்தமாய்  அப்பாவின் ஆத்திர வார்த்தைகள்  எதிர் பர்த்தில்  அலட்சியமாய் தூங்கும் பயணியாய்  என் இயலாமை  இறங்கிப்  போகையில்  பெருமூச்சு விட்டபடி  அமைதியாய் நின்றது  புகை வண்டி !   இரா. இலட்சுமணன்

உயிர்ப்புள்ள பொழுதுகள்

களத்து வீட்டில்  கூட்டாஞ்சோறு சமைத்து சாப்பிட்டதையும்,  மணல் வீடு கட்டிப்  பக்கத்துக்கு வீட்டு பாத்திமாவுடன்  அப்பாம்மா விளையாட்டு விளையாடியதையும்  பூத்துக் குலுங்கும்  புன்னைமரத்திலிருந்து  பொன்வண்டு பிடித்ததையும்  பச்சோந்தியின் வாயில்  மூக்குப்  பொடி  தூவி  மாறும் வண்ணங்களை  ரசித்ததையும்  பறக்கும் அழகில் லயித்து  தட்டான் பிடித்ததையும்  வண்ணத்துப் பூச்சிகளை தொடர்ந்து  பசி மறந்ததையும்  மறப்பதற்கில்லை  கோலங்களின் மத்தியில்  வைப்பதற்கென  பரங்கி, தும்பை பூக்களின்  முகங்களில்  விழித்த வைகறைகள்  வயல்களில் துள்ளும்  கெளுத்தி மீன்கள்  பிடித்த கைகளில்  சொரியும் ரத்தம்  தேனடைகளில்  ஈர்க்குச்சி செருகியெடுத்து   நக்கிச் சுவைத்த நாட்கள்  நினைக்குந்தோறும்  இனிக்கும்  சிதையாத ஞாபகங்கள் அவை  பொம்மைகளோடும்  கேபிள் டிவி, வீடியோ கேமுடனும்  சபிக்கப்பட்டிருக்கிறது  என் பிள்ளைகளின் பால்யம் ! குழந்தைகள் அறிவரோ  உயிர்...

எம் மக்கள்

படம்
வெள்ளைக்காரன் பட்டாளத்துல  சிப்பாயா இருக்கறவன்னு தெரிஞ்சதும்  அவனைப்  பாதி சவரத்தில் தொறத்துண வைரப்பன் தாத்தா  என்னைக்காவது ஒரு நாளு  வசதி வந்துடாதா எனக்  காது குத்தின   ஓட்டை  தூர்ந்திடாமல்  வேப்பங்குச்சி செருகியிருக்கும்  பாக்கியம் பெரியம்மா  புள்ளத்தாச்சி வயத்தில உதைக்கிற மாதிரி  மரத்தை வெட்டாதீங்கப்பா  மரத்தையும் நேசிக்க சொன்ன  காசியம்மா பாட்டி  இவர்களோடு  சாதியைச் சொல்லி  காதலை புதைத்த கல்லறையோடும்  என் கிராமம்  இரா. இலட்சுமணன்