ஒத்திவைப்பு
சிறுநீர் கழிக்கத்
தூண்டப்படுகையில்
வீதியென்றும் பார்ப்பதில்லை
நாகரீகத்தை புறந்தள்ளலாம்.
கடிகார முட்களின் மீது
பார்வை அமர்ந்திருக்கும்
பசியாறும் நேரம் பார்த்து !
காலந்தப்பினால்
எல்லாம் போச்சென்று
ஏராளமாய் உபதேசம் இருக்கிறது
ஆனாலும்
அப்புறம் எழுதலாம்
ஒத்திவைக்க எப்போதும்
இலகுவாய் இருக்கிறது
கவிதை !
இரா. இலட்சுமணன்
கருத்துகள்
கருத்துரையிடுக