அறிவுரை



தாத்தாவும், பாட்டியும் 

அடிக்கடி சொன்னாங்களாம் 

பணம், காசை செலவு பண்ணாதே..தண்ணி மாதிரி !


காணி, கழனி வித்துட்டுப் பட்டணம் வந்தாராம் 

பரோபகார அப்பா !

 கிராமம்,  வயல், குயிலு, குருவி, கருவ முள்ளு 

எதுவும் பார்த்ததில்லே  

ஏக்கம் யாருக்கும் புரிஞ்சதில்லே 


அப்பா இப்போ 

அடிக்கடி சொல்லுவாரு 

காசு பணம் மாதிரி செலவு பண்ணாதே 

கார்ப்பரேஷன் தண்ணிய 


அப்பாவாயிருந்தா என்ன 

அடியேனாயிருந்தா என்ன 


யாரால முடியும் 

அறிவுரை கேட்டு அப்படியே நடக்க !


இரா. இலட்சுமணன்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இலட்சுமணனின் நுட்பமான பார்வை : எழுத்தாளர் சுஜாதா அணிந்துரை

தொடரும் நிழல்

இசை