சொல்ல முடியுமா ?

துயரங்களின் மடியில் 

தலைசாய்த்துக் கிடக்கும் 

கவிதையைப்  பாருங்கள் 


உதடு விரித்து மலர்கிற 

சிரிப்பு தெரியும் 

வெடிக்கக் காத்திருக்கிற 

சோகம் தெரியுமா ?

காயத்திற்கும், வேதனைக்கும் 

என்ன வேற்றுமை?


காயங்களினின்றும் 

ரத்தம் 

வேதனைகளினின்றும்

கண்ணீர் 


சொல்ல முடியுமா..

காயம் பெரிதா ?

வேதனை பெரிதா ?


இரா. இலட்சுமணன்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இலட்சுமணனின் நுட்பமான பார்வை : எழுத்தாளர் சுஜாதா அணிந்துரை

தொடரும் நிழல்

இசை